முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 350

நற்றாயிரங்கல் என்னும் அகத்துறைப் பாடலான இந்தக் காஞ்சித் திருப்புகழ் மிகவும் ஆச்சரியகரமான அமைப்புடையது.  பாடலைக் கவனியுங்கள். 

Updated On : 1 செப்டம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

நற்றாயிரங்கல் என்னும் அகத்துறைப் பாடலான இந்தக் காஞ்சித் திருப்புகழ் மிகவும் ஆச்சரியகரமான அமைப்புடையது.  பாடலைக் கவனியுங்கள்.  ஒவ்வோரடியிலும் முதலிரு சீர்களும், மூன்றாம் நான்காம் சீர்களும் ஒரேமாதிரியான அமைப்பில்—அப்படியே திரும்ப வந்தோ அல்லது சிறிய மாற்றங்களைப் பெற்றோ—அமைந்துள்ளன.  முதல் சீர், மூன்றாம் சீர், ஐந்தாம் சீர் ஆகியவை ஒரே சொற்கள் (நச்சு, நச்சு நச்சு//நத்து, நத்து, நத்தி//இச்சை, இச்சை, இச்சி//எத்தனை, எத்தனை, இத்தனை//பச்சை, பச்சை, பச்சை//பத்தி, பத்தி, பத்தி//கச்சி, கச்ச, கச்சி//கற்ப, கற்ப, கைத்த.  ஒவ்வோரிடத்திலும் பொருளால் மாறுபடுகிறது.  அதுமட்டுமல்லாமல், மடக்கடிகளை மட்டும் தனியாக எடுத்து அமைத்தால் அது ஒரு தனிப்பாடலாக மாறும்.  இதைக் கரந்துறைப் பாடல் என்பார்கள்.  கரந்து உறையும் பாடல், மறைந்திருக்கும் பாடல் என்று பொருள்.  மடக்கடிகளை மட்டும் தனியே எடுத்தால்:

நச்சுமிழ் களங்க மதியாலும் நத்திரை வழங்கு கடலாலும்
இச்சிறுமி நொந்து மெலியாதே இத்தனையில் அஞ்சல் எனவேணும்
பச்சைமலை எங்கும் உறைவோனே பத்திர மணிந்த கழலோனே
கச்சில் அமர்ந்த கதிர்வேலா கைத்தளை களைந்த பெருமாளே

என்று பாடலுக்குள் பாடலாக அமையும்.  இரண்டின் பொருளையும் நாளைக்குக் காண்போம்.  இப்போது பாடலைப் பார்க்கலாம்:

Advertisement

தத்ததன தந்த தத்ததன தந்த

                தத்ததன தந்த                                                              தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று

                        நச்சுமிழ் களங்க                                     மதியாலும்

      நத்தொடு முழங்க னத்தொடு முழங்கு

                        நத்திரை வழங்கு                                   கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த

                        இச்சிறுமி நொந்து                                 மெலியாதே

      எத்தனையு நெஞ்சில் எத்தனை முயங்கி

                        இத்தனையி லஞ்ச                                லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை

                        பச்சைமலை யெங்கு                            முறைவோனே

      பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்

                        பத்திரம ணிந்த                                      கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர் விரும்பு

                        கச்சியில மர்ந்த                                     கதிர்வேலா

      கற்பக வனங்கொள் கற்பக விசும்பர்

                        கைத்தளை களைந்த                            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.