பகுதி - 352
உன் அடிமையாகிய நான் உன்னையன்றி வேறெதையும்
‘உன் அடிமையாகிய நான் உன்னையன்றி வேறெதையும் நம்பேன்’ என்று சொல்லும் பழநி மலைத் திருப்புகழ். சற்றே நீளமான சந்த அமைப்பை உடையது; ‘ததத ததததத’ என்பது போன்ற சொற்கட்டுகளும் அமைந்தது. ஒற்று நீக்கி அடிக்கு 46 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற எல்லா சீர்களும் குறிலெழுத்து; சீரான இடைவெளிகளில் மெல்லொற்றும் வல்லொற்றும் மாறிமாறி வரும் அமைப்பு.
தனன தனனதன தந்தத்த தந்ததன
தனன தனனதன தந்தத்த தந்ததன
Advertisement
தனன தனனதன தந்தத்த தந்ததன தந்ததான
அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
பரிய குடர்பழுவெ லும்பைப் பிடுங்கரண துங்ககாளி
பவுரி யிடநரியு லம்பப்ப ருந்திறகு
கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் தம்பிரானே.