முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 354

இந்தத் திருச்செந்தில் திருப்புகழ் பலவிதங்களில் பெயர்பெற்ற ஒன்று.  மனிதன் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய்,

Updated On : 3 செப்டம்பர், 2016 at 5:22 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:31 PM

இந்தத் திருச்செந்தில் திருப்புகழ் பலவிதங்களில் பெயர்பெற்ற ஒன்று.  மனிதன் தன் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய், எத்தனை கடன் வைத்திருக்கிறாய்’ என்று மொய்த்துக் கொள்ளும் மக்களும் உடலை வருத்தும் பிணியும் தத்ரூபமாகச் சித்திரிக்கப்படுவது ஒருபுறம்.  இராமாயணக் காட்சிகளை ஆங்காங்கே சொல்லிக்கொண்டு வரும் குருநாதர், இந்தப் பாடலில் மிக அழகான இராமாயணக் காட்சியொன்றைத் தீட்டியிருக்கிறார்.  இராமனுடைய பால லீலைகளை வால்மீகியோ கம்பனோ பாடவில்லையென்றாலும்—குலசேகர ஆழ்வார் பாடியதைச் சேர்க்காமல்—அருணகிரிநாதர் இராமனை பாலருந்த அழைக்கும் கோசலையை இதில் காட்டுகிறார். 

இத்தனைத் துன்பங்களும் சேர்த்து உயிரை வருத்தி, உயிர் ஓய்ந்துபோகின்ற நேரத்தில் மயில்மீது இருந்தபடி காட்சிதந்தருள வேண்டும் என்பது பாடலின் மையக் கருத்து.  மூன்றாமடியிலிருந்து சந்தம் ஒன்றே என்றாலும் தொனி சட்டென மாறுகிறது. 

அடிக்கு ஒற்றுநீக்கி 43 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் எட்டாவது எழுத்து நெடில்; மற்ற அனைத்தும் குறில்.  ஒற்று சேர்த்து இரண்டாமெழுத்து மெல்லொற்று. 

Advertisement

தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன

      தந்த தனன தனனா தனனதன             தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை

         தந்த மசைய முதுகே வளையஇதழ்

         தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி

      தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்

         கிண்கி ணெனமு னுரையே குழறவிழி

         துஞ்சு குருடு படவே செவிடுபடு        செவியாகி

வந்த பிணியு மதிலை மிடையுமொரு

         பண்டி தனுமெ யுறுவே தனையுமிள

         மைந்த ருடமை கடனே தெனமுடுகு    துயர்மேவி

      மங்கை யழுது விழவே யமபடர்கள்

         நின்று சருவ மலமே யொழுகவுயிர் 

         மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை   வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக

         மைந்த வருக மகனே யினிவருக

         என்கண் வருக எனதா ருயிர்வருக      அபிராம

      இங்கு வருக அரசே வருகமுலை

         யுண்க வருக மலர்சூ டிடவருக

         என்று பரிவி னொடுகோ சலைபுகல     வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள

         வஞ்சி மருவு மழகா அமரர்சிறை

         சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய      அடுதீரா

      திங்க ளரவு நதிசூ டியபரமர்

         தந்தகுமர அலையே கரைபொருத

         செந்தி னகரி லினிதே மருவிவளர்      பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.