முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 626

இறைவனுடைய அருள்மொழியை

Updated On : 10 ஆகஸ்ட், 2017 at 11:26 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:07 PM

இறைவனுடைய அருள்மொழியைக் கோரும் இப்பாடல் திருவேற்காடுக்கானது.  இதில் சொல்லப்படும் ஆலயமும் தற்போது திருவேற்காடு என்றதும் நினைவுக்கு வரும் ஆலயமும் வேறு என்பதை முன்னமேயே சொல்லியிருந்தோம்.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு நெடில், இரண்டு குறில், இரண்டு வல்லொற்று என்ற அமைப்பையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களும் மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களும் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்று மூன்று எழுத்துகளைக் கொண்டவை.

தாத்தாத்தன தானன தானன
      தாத்தாத்தன தானன தானன
      தாத்தாத்தன தானன தானன தனதான

Advertisement

கார்ச்சார்குழ லார்விழி யாரயி
         லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
         வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே

காழ்க்காதல தாமன மேமிக
         வார்க்காமுக னாயுறு சாதக
         மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே

பார்ப்பாயலை யோவடி யாரொடு
         சேர்ப்பாயலை யோவுன தாரருள்
         கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா

பார்ப்பாவல ரோதுசொ லால்முது
         நீர்ப்பாரினில் மீறிய கீரரை
         யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ லருள்வாயே

வார்ப்பேரரு ளேபொழி காரண
         நேர்ப்பாவச காரண மாமத
         ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப

வாக்காசிவ மாமத மேமிக
         வூக்காதிப யோகம தேயுறு
         மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்வாழ்வே

வேற்காடவல் வேடர்கள் மாமக
         ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
         வேற்காடுறை வேதபு ரீசுரர் தருசேயே

வேட்டார்மக வான்மக ளானவ
         ளேட்டார்திரு மாமண வாபொனி
         னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.