முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 636

இறைவன் திருவடியைச் சிந்திக்கவும்

Updated On : 20 ஆகஸ்ட், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:11 PM

துன்பங்களும் நோய்களும் அழியவும் எப்போதும் இறைவன் திருவடியைச் சிந்திக்கவும் கோரும் இப்பாடல் வேதாரணியத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 30 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளாகவும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்கள் இரண்டு குறில்களும் கணக்கில் சேராத இரண்டு வல்லொற்றுகளாகவும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்கள் மூன்று குறிலும் ஒரு மெல்லொற்றும் கொண்டு அமைந்துள்ளன.

தானன தத்தத் தந்தன தந்தன தனதானா

Advertisement

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
      சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே

ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
      ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே

ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
      ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல்  மருகோனே

வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
      வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.