முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 638

திருவடியிலே தங்குகின்ற பேற்றை

Updated On : 22 ஆகஸ்ட், 2017 at 8:52 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:13 PM

‘உன் திருவடியிலே தங்குகின்ற பேற்றைத் தரவேண்டும்’ என்று கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட இந்தப் பாடல் மொத்தமும் குற்றெழுத்துகளால் அமைந்து, வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்து ஓசையின்பத்தைத் தருகின்றது.  தொங்கல் சீர் தவிர்த்த மற்ற ஆறு சீர்களிலும் இரண்டு குறில், ஒரு வல்லொற்று, ஒரு குறில், ஒரு மெல்லொற்று, ஒரு குறில் ஒரு மெல்லொற்று என்ற சீரான அமைப்பில் நடப்பதைப் பார்க்கலாம்.


தனத்தந்தந் தனத்தந்தந்
      தனத்தந்தந் தனத்தந்தந்
      தனத்தந்தந் தனத்தந்தந் தனதான

Advertisement

கருப்பந்தங் கிரத்தம்பொங்
         கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
         களைக்கண்டங் கவர்ப்பின்சென்   றவரோடே

கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
         துவக்குண்டும் பிணக்குண்டும்
         கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் தடுமாறிச்

செருத்தண்டந் தரித்தண்டம்
         புகத்தண்டந் தகற்கென்றுந்
         திகைத்தந்திண் செகத்தஞ்சுங் கொடுமாயும்

தியக்கங்கண் டுயக்கொண்டென்
         பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
         சிதைத்துன்றன் பதத்தின்பந் தருவாயே

அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
         டிரைக்கண்சென் றரக்கன்பண்
         பனைத்தும்பொன் றிடக்கன்றுங்   கதிர்வேலா

அணிச்சங்கங் கொழிக்குந்தண்
         டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
         தளிக்குஞ்செந் திலிற்றங்குங் குமரேசா

புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
         கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
         புதுக்குங்கங் கையட்குந்தஞ் சுதனானாய்

புனக்குன்றந் திளைக்குஞ்செந்
         தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
         புறத்தண்கொங் கையிற்றுஞ்சும்   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.