முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 646

திருவடியைத் தந்தருளவேண்டும்

Updated On : 31 ஆகஸ்ட், 2017 at 9:23 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM

பற்பல சமயத்தவரும் தமக்குள்ளே வாதிட்டு மோதிக் கலகமிட்டும் அறிய முடியாததாகிய பொருளை உபதேசித்தருளி, ஞான தரிசனத்தைக் கொடுத்து உன்னுடைய திருவடியைத் தந்தருளவேண்டும் என்று கேட்கின்ற இந்தப் பாடல் பழநி மலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்தும் ஒரு வல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் பயில்கின்றன.


தனதனன தத்த தான தனதனன தத்த தான
      தனதனன தத்த தான தனதான

Advertisement

கலைகொடுப வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
         கபிலர்ப ரக்க ணாதர் உலகாயர்

கலகமிடு தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
         கலகலென மிக்க நூல்க ளதனாலே

சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
         தெரிவரிய சித்தி யான வுபதேசந்

தெரிதரவி ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
         திருவடியெ னக்கு நேர்வ தொருநாளே

கொலையுறஎ திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
         குரகதமு கத்தர் சீய முகவீரர்

குறையுடலெ டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
         குலவியிட வெற்றி வேலை விடுவோனே

பலமிகுபு னத்து லாவு குறவநிதை சித்ர பார
         பரிமளத னத்தில் மேவு மணிமார்பா

படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
         பழநிமலை யுற்ற தேவர் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.