முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 648

அத்துவிதமாகக் கலந்திருக்கும் பேற்றை

Updated On : 7 செப்டம்பர், 2017 at 10:08 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:19 PM

இறையும் தானும் வேறுவேறாக இல்லாமல் ஒன்றாக அத்துவிதமாகக் கலந்திருக்கும் பேற்றைக் கோரும் இப்பாடல் பழமுதிர்ச் சோலைக்கானது.  இதில் நான்காமடியில் ‘சோகமது தந்து எனையாள்வாய்’ என்று வருகின்றது.  இங்கே ‘சோகம்’ என்பதற்கு ‘நீ, நான் என்ற வேறுபாடு அற்ற நிலை’ என்று பொருள்.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் குறில், (கணக்கில் சேராத) மெல்லொற்று, குறில் என இரண்டெழுத்துகளுமாக அமைந்திருக்கிறது.


தானதன தந்த தானதன தந்த
        தானதன தந்த தனதான

Advertisement

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
         மாயம தொழிந்து தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
         மாபத மணிந்து பணியேனே

ஆதியொடு மந்த மாகியந லங்கள்
         ஆறுமுக மென்று தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
         தாடுமயி லென்ப தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
         நானில மலைந்து திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
         நாடியதில் நின்று தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
         சோகமது தந்து எனையாள்வாய்

சூரர் குலம் வென்று வாகையொடு சென்று
         சோலைமலை நின்ற பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.