முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 654

போலிக் கவிகளைப் பழித்து

Updated On : 18 செப்டம்பர், 2017 at 10:06 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:25 PM

போலிக் கவிகளைப் பழித்து, வாக்கிலே பக்திமிக்க செஞ்சொற்களின் பெருக்கு மிகுந்துவருமாறு வேண்டுகின்ற இந்தப் பாடல் பழனிப் பதிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்றெழுத்துகளுமாக அமைந்துள்ளது.


தனனதன தந்த தத்த தானன
      தனனதன தந்த தத்த தானன
      தனனதன தந்த தத்த தானன தனதான

Advertisement

நிகமமெனி லொன்று மற்று நாடொறு
      நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
      நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா

நெளியமுது தண்டு சத்ர சாமர
       நிபிடமிட வந்து கைக்கு மோதிர
      நெடுகியதி குண்ட லப்ர தாபமு முடையோராய்

முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
      முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
      முடிவிலவை யொன்று மற்ற வேறொரு     நிறமாகி

முறியுமவர் தங்கள் வித்தை தானிது
      முடியவுனை நின்று பத்தி யால்மிக
      மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே

திகுதிகென மண்ட விட்ட தீயொரு
      செழியனுடல் சென்று பற்றி வாருகர்
      திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது

சிறியகர பங்க யத்து நீறொரு
     தினையளவு சென்று பட்ட போதினில்
     தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற

 மகிதலம ணைந்த அத்த யோனியை
     வரைவறம ணந்து நித்த நீடருள்
     வகைதனைய கன்றி ருக்கு மூடனை மலரூபம்

வரவரம னந்தி கைத்த பாவியை
     வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
     வளர்பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.