முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 656

திருவடிக்குத் தொண்டாற்ற

Updated On : 20 செப்டம்பர், 2017 at 8:46 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:26 PM


திருவடிக்குத் தொண்டாற்றக் கோரும் இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
                தனத்தத் தந்தனந் தனதான

Advertisement

தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
               டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
               தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண்  சடத்தைத் துஞ்சிடுங்
              கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்  

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
              கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
             புரக்கக் கஞ்சைமன் பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
            பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா 

குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
           குலத்திற் கங்கைதன் சிறியோனே 

குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
           குவித்துக் கும்பிடும் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.