முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 658

தரிசித்து அன்பு கொள்வதை வேண்டும்

Updated On : 22 செப்டம்பர், 2017 at 9:34 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:12 PM

இறைவனைத் தரிசித்து அன்பு கொள்வதை வேண்டும் இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு மெல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு மெல்லொற்றும் ஒரு வல்லொற்றும் அமைந்துள்ளன.

தந்தனந் தந்தத் தனதானா

Advertisement

சந்ததம் பந்தத்  தொடராலே
                சஞ்சலந் துஞ்சித் திரியாதே

கந்தனென் றென்றுற் றுனைநாளும்
                கண்டுகொண் டன்புற் றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
                சங்கரன் பங்கிற் சிவைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
                தென்பரங் குன்றிற் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.