முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 766

கனவிலும் நனவிலும் மறவேன்

Updated On : 26 பிப்ரவரி, 2018 at 11:04 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:50 PM


‘உன்னுடைய திருவடியைக் கனவிலும் நனவிலும் மறவேன்’ என்று உருகும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும், மற்ற எல்லாச் சீர்களிலும் நான்கு குற்றெழுத்துகளும் கொண்டது.

தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன
                தனன தனதன தனதன தனதன தனதான

Advertisement

குமர குருபர குணதர நிசிசர

                        திமிர தினகர சரவண பவகிரி
                        குமரி சுதபகி ரதிசுத சுரபதி குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
                        முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
                        கொடிய வினையனை யவலனை யசடனை யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
                        களவி னொடுபொரு ளளவள வருளிய
                        கலவி யளறிடை துவளுறும் வெளிறனை யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
                        சுருதி புடைதர வருமிரு பரிபுர
                        கமல மலரடி கனவிலு நனவிலு மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
                        மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
                        சமுக முககண பணபணி பதிநெடு வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
                        கனக கிரிதிரி தரவெகு கரமலர்
                        தளர வினியதொ ரமுதினை யொருதனி கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
                        அகில புவனமு மளவிடு குறியவன்
                        அளவு நெடியவ னளவிட அரியவன் மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
                        மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
                        அறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.