முகப்பு
இந்த நாளில்...

03.11.1957: விண்வெளிக்கு முதன் முதலில் உயிரினம் ஒன்று அனுப்பப்பட்ட தினம் இன்று!

ரஷ்ய புரட்சி நடந்ததன் நினைவாக ஸ்புட்னிக் என்னும் விண்கலம் ஏவப்பப்ட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:15 PM
பகிர்:

ரஷ்ய புரட்சி நடந்ததன் நினைவாக ஸ்புட்னிக் என்னும் விண்கலம் ஏவப்பட்டது.  இந்த கலமானது  இந்த பயணத்தில் சூர்ய மற்றும் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகளை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகை வியக்கச் செய்யும் விதமாக  லைகா என்கிற பெயர் கொண்ட நாய் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-1 விண்கலம் மூலம் விண்ணை நோக்கி பயணம் அனுப்பப்பட்டது.

இதன் மூலம் முதன்முதலில் விண்வெளியில் பயணம் போன உயிரினம் என்கிற பெருமை அந்த நாய்க்கு வந்து சேர்ந்தது. ஒரு அப்பாவி ஜீவனை கொடுமைப்படுத்துகிறார்கள் என பரவலாக பிராணிகள் நல ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன . ஆனாலும் லைகா விண்கலத்தில் பயணம் செய்தது.

சில வாரங்கள் கழித்து லைகா என்னும் அந்த நாய் இறந்து போனதாக அறிவித்தார்கள்;ஆனால் அதன் பிறகுதான் விண்கலம் புறப்பட்ட சில மணிநேரத்திலேயே அதிக வெப்பம் மற்றும் பயம் காரணமாக லைகா இறந்து போனது தெரிய வந்தது.

ஆனால் அதன் மூலம் கிடைத்த தரவுகளைக் கொண்டு நிகழ்ந்த ஆய்வுகளின் பயனாக யூரிகாகரின் என்பவர் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனிதர் ஆனார்.

முழு கட்டுரையைப் படிக்க →