இந்த நாளில்...

07.09.1934: எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாய பிறந்தநாள் 

புகழ்பெற்ற வங்க  எழுத்தாளர்  சுனில் கங்கோபாத்யாய பிறந்த தினம் இன்று.

கவியோகி வேதம்

சுனில் கங்கோபாத்யாய வங்க மொழியில் எழுதிய இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். இவர் தற்போதைய பங்களாதேஷின் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள பரிச்புரா என்னும் ஊரில்  07.09.1934 அன்று பிறந்தார்.

இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1954-ஆம் ஆண்டு வங்க மொழியில் முதுகலை பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே 'க்ரித்திபஸ்'  என்னும் கவிதைக்கான  இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அது பல புதிய அலை  கவிஞர்களுக்கு ஒரு சிறந்த தளமாக விளங்கியது. 

அப்படித் தொடங்கிய இவரது இலக்கிய பயணத்தில் 4 சிறுகதை தொகுப்புகள், 8 நாவல்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.    மேலும் எண்ணற்ற கவிதைகளும் இவரது ஆக்கங்களாகும். இவர் 2008-ஆம் ஆண்டு 'சாகித்ய அகாதெமி' தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள இவர் 23.10.2012 அன்று மாரடைப்பால் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரும்புத் திரையாகும் மூங்கில் திரை!

புதிதாக தோ்வாகும் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் - அரசு மருத்துவா்கள் பொதுக்குழுவில் தீா்மானம்

சென்னை- செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க அதிமுக எம்.பி.க்கள். வலியுறுத்தல்

ரயிலை சுத்தமாக பராமரிக்க பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பா? - மத்திய அரசு மறுப்பு

எஸ்.ஐ.ஆா். வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதிட்டாா் மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT