கவிதைமணி

கைகோர்ப்போம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

இயற்கையை அழிக்கும் 
அரக்கர்களை ஒழிக்க
ஒன்றாய் கைகோர்ப்போம் 
இயற்கை அன்னை மகிழ்வாள்.

கல்வியைக் காசாக்கும் 
கல்வி வியாபாரிகளை
கம்பிக்குள் தள்ள கைகோர்ப்போம் 
ஏழை மாணவர்கள் மகிழ்வார்கள். 

அரிசிக்குள் கல்லையும் 
பாலுக்குள் நீரையும் மட்டுமல்ல 
எல்லாவற்றுக்குள்ளும் எதையாவது கலப்போரை
எதிர்க்க கைகோர்ப்போம்.

ஓட்டுக்கு பணம் வழங்கி
பணம் சம்பாதிக்கவே போட்டியிடும்
வேட்பாளருக்கு எதிராய் கைகோர்ப்போம் 
தோல்வியை அவர்க்குப் பரிசளிப்போம்.

மலையாய் ஒதுக்கும் நிதி
துளியாய்ப் போய்ச் சேர
காரணமான ஊழல்வாதிகளை 
உதாசீனப்படுத்த கைகோர்ப்போம்.

நாம் கோர்க்கும் கையின் நோக்கம் 
மற்றவர்களை ஈர்த்து 
நம்மிடம் சேர்க்குமேயானால்
வெற்றி சாத்தியமே நமக்கு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT