கவிதைமணி

கைகோர்ப்போம்: கவிஞர்.கோவிந்தராஜன் பாலு

கவிதைமணி

விவசாயம்தீக்கிரையாய்விளைச்சல்இல்லை.
விவசாயி குடும்பத்தில் விளைந்த கோரம். 
கவலைகள்வாழ்க்கையில்கனலாய்க்காண 
கண்ணீரும் வறண்டதால்கண்டோம்சோகம். 
தவமாகத்தாவிவரும்தண்ணீர்இல்லை 
தடுப்பணைகள்உயர்த்திட்டார்தடைகள்போட்டு. 
விவரங்கள் சொன்னாலும் வெறுப்பே காட்ட 
வேண்டுதல்கள் கிட்டிடுமோ விரைந்து வாரீர். 

தாகத்தில் வாடித்தான் தண்ணீர் கேட்டும் 
தரவில்லை வாடுகின்றோம் தாகத் தாலே. 
மேகங்கள் ஓடித்தான் ஒளியக் கண்டேன்.
 மேமாத வெயிலாலே மேனி வாட 
தேகத்தில் குருதியோட்டம் தேங்கி நிற்க 
தேடித்தான் தண்ணீரால் தீயாய் வாடி
 வேகமாக வாருங்கள் விரைந்து பேசி 
வென்றிடவே கைகோர்த்து வெல்வோம் வாரீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT