கவிதைமணி

கைகோர்ப்போம்: பெருமழை விஜய்

கவிதைமணி
காதலுக்காய்க் கை கோர்க்கும் கன்னியரே!காளையரே!கன்னித்   தமிழ்நாட்டில்   கண்ணியமாய்   நாம் வாழ..அந்நியராய் ஆகிவிட்ட அரசியல்வாதிகளைத் துரத்த...அதிகார போதை கொண்ட அதிகாரிகளைத் திருத்த...மக்கள் நலன் மறந்து வாழும் மந்திரிகளை நல்வழி நடத்த...'எல்லோருக்கும் எல்லாமும்!...எல்லாமும் எல்லோருக்கும்!'என்றநிலை   தமிழ்நாட்டில்   ஏகமாய்த்    தலையெடுக்க...உழுபவர்கள்    அனைவரும்   உற்சாகம்    மிகவடையஉழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் உறுதியாய்ப் பணிகிடைக்க...படித்தவர்கள் அனைவருமே உரித்தான பணியில் தானமர...கடித்துக்  குதறும்   தெரு நாய்களைக்  கட்டுப்படுத்த...கல்வி   என்ற பெயரால்   கடின வியாபாரம்   செய்யும்உளுத்துப்போன வீணர்களை ஊரை விட்டே விரட்ட...படித்துப் படித்துச் சொல்லியும் டாஸ்மாக்கை மூடாத கூவத்தூர்     கனவான்களை    கூடு விட்டு     எழுப்ப...நமது   வரிப் பணத்தில்   நயமான   சம்பளம்    பெற்று யாருக்கோ பாதுகாப்பளிக்கும் காக்கிகளைத் திருத்த...காசுக்காய் நீதி விற்கும் கனம் கோர்ட்டுகளை மாற்ற...​ஊராரை    மிரட்டி   ஒன்றாய்ச்   சொத்து   சேர்த்தஈனர்களை   விரட்டி   இம்மண்ணைப்  புனிதமாக்க...ஒன்றாய்ச் சேர வேண்டும்!கோர்த்த கைகள் உறுதி பெற வேண்டும்!நன்றாய் இவ்வுலகை நாம் சமைப்போம்! என்று சொல்லிகன்றும்    மாடும் போல்   கனியன்பை   மிக க்   கொண்டுஒன்றாய் இணைந்திடுவோம்!உறுதியாய்க் கை பற்றிடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT