கவிதைமணி

எனை நனைத்த மழை :- ஆ.மகராஜன்

கவிதைமணி

வறண்டு வெடித்த
வயல்வெளியில் நின்றவனை 
வானிலிருந்து கடவுளின் 
கரங்களாய்
நீண்டு தீண்டின தூறல்கள்.

கண்களில் துளிர்த்த 
கண்ணீரோடு கலந்து
உடல் வழி ஊர்ந்து
உப்பு சுவைக் கூட்டி
வழிந்த நீர் 
காய்ந்த வெடிப்புக்
கீறல்களுள் புகுந்து 
காணாமல்  போயிற்று
கணப் பொழுதில்.

மழையாய்ப் பரிணமிக்க 
மறுதலித்து அவன்பால்
கருணையும் கவலையும் 
கொள்ளாத் தூறல் 
நின்று போனதில்,
வானம் பார்த்து நின்றவனின்
விழிவழி  வழிந்த 
கண்ணீர் நில்லாது போயிற்று..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT