கவிதைமணி

எனை நனைத்த மழை:  கு.முருகேசன்

கவிதைமணி

மழையே! மழையே!
வானின் மகளே!
நீ வந்தால் நனைப்பாய்
என்னையும் மண்ணையும்!

மழையே! மழையே!
நீ அளவோடு பொழிந்தால்
பள்ளத்தை நிரப்புகிறாய்!
அளவின்றி பொழிந்தால்
எங்கள் இல்லத்தை நிரப்புகிறாய்!

மழையே! மழையே!  வா வா
நீ வந்தால்தான்
 மரம் குளிக்கும்
மலை குளிக்கும்
சிலை குளிக்கும்
எங்கள் தலை குளிக்கும்!

மழையே! மழையே!
நீ! வானம் தந்த பரிசு
வாங்காத நிலம் தரிசு!
உன் மனசு ரொம்ப பெருசு

மழையே! மழையே!
நீ வந்தால்
விவசாயிக்கு சாகுபடியாகும்!
நீ வராவிட்டால்
விவசாயியே சாகும்படியாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT