கவிதைமணி

எனை நனைத்த மழை: சு.ஜெயக்குமார்​

கவிதைமணி

வானில் இருள் சூழ்ந்தது
என் மனதில் ஒளி நிறைந்தது
மழைத் தூரல் விழுந்தது
என் உள்ளம் குளிர்ந்தது
இளமை துள்ளிக் குதித்தது
என் நெஞ்சம் பாடி மகிழ்ந்தது 
பேய் மழையாய் மாறிய சாரல்
சிறிதும் களைப்பின்றி தொடர்ந்தது
கவலையைக் களைந்த என்னுடல்
சலிப்பின்றி நனைந்து களித்தது
சட்டென மனம் இடறியது
கணத்தில் இதயம் கனத்தது
என்னைத் திட்ட இப்போது
உயிரோடில்லா அன்னையை
என் கண்முன் நிறுத்தியது
எனை நனைத்த மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT