கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

அடைமழை இரவு; அதிலொரு கனவு 
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;

தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது 
துணையென பொழியும் கருணையும் அழகு 

குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு

கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது 
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது 

நெடுந் தனிமைகளைக்  களைந்திட  விழைந்து  
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து 

மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு 
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து 

உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து 
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து 

பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து 
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு 

மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது  !!!!

- கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT