மழை வருமா வராதா ...எல்லோர்
மனதிலும் இந்த கேள்வி ஒன்றுதான் !
அந்திக் கருக்கலில் கொட்டியது மழை !
பட்டென கேட்டார் எல்லோரும்
"என்ன மழை இது ...வீட்டுக்கு நான்
எப்படி செல்ல ?"
இந்த மழை இரவில் பொழியக் கூடாதா ?
இரவு முழுதும் மழை ....காலையில்
வெய்யில் என்று இருக்கக் கூடாதா ?
மழை நான் கேட்கிறேன் .. மனிதா உன் வீட்டுக்கு
எப்படி செல்வது மழை என்னுடன் பயணித்து என
நீ கேட்கிறாய் !
வீடு என்று ஒன்று இல்லாத நடைபாதை வாசிகள்
மழை இரவிலும் "இரவில் மழை ஏன்" என்று இதுவரை
என்னைக் கேட்டது இல்லையே !
என் வரவுக்கு இறைஞ்சும் நீ... நீ சொல்லும்
நேரம் மட்டும் நான் வர வேண்டும் என்று
நினைப்பது என்ன நியாயம் ?
- கே.நட்ராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.