கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

கருமேகங்கள் சூழ்ந்து இருளை மேலும் இருளாக்க
காரிருளை கிழித்துக்கொண்டு பெய்யென பெய்யும் மழை!
மின்விளக்குகள் அணைந்து போய்
எண்ணெய் விளக்குகளுக்கு உயிர்கொடுக்கும் மழை!
நகரின் இரைச்சலை அமைதியாக்கி
நிகரில்லா ஓசையோடு பெய்யும் மழை!
சாலைகள் எல்லாம் ஓடைகள் ஆக
நகரத்து அழுக்குகள் அதில் கரைந்து ஓட
நதிகளை தேடி ஓடும் நல்ல மழை!
தனிமையான ஓர் மழை இரவு
மனதினை திறந்து பார்க்கிறது!
நினைவுகளை பின்னோக்கி இழுத்து
இன்றைய இரவினை இனிமையாக்கி
சென்ற காலங்களை கண்முன் விரிக்கிறது!
பேரிரைச்சல் மழையில் ரீங்காரமிடும்
பெரும் நினைவுகளை மீட்டெடுக்கையில்
புதிதாக பிறப்பெடுக்கிறோம்!
மழை இரவுகள் உள்ளத்தின் ஈரத்தை
ஊறச் செய்கிறது! உதிரும் நீர்த்துளிகள்
மனதை கழுவி புதுப்பிக்கிறது!
மழை கழுவிய சாலைகளில் நடக்கையில்
மனதில் உற்சாகம் பிறப்பெடுக்கிறது!

- நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT