கவிதைமணி

மழை இரவு

கவிதைமணி

தூது செல்லும்
மேகத்  தோழிகளே ...
சூரியக் காதலன்
உங்கள் காதலை
ஏற்று கொள்ளாததனால் தானோ...
இரவில் மழையை
கண்ணீராய் உகுக்கின்றீர்களோ ...?
இரவின் மழையே ...
நீதான் அற்புதமான பொருள்  ...
ஏனென்றால்,
ஒளியை கண்டு எல்லோரும்
மயங்குவது இயல்பு ....
ஆனால் நீ  இருளை கண்டு
மயங்கினாயே.....!
வரையா மரபின் மாரி நீதானே...?
மழைக்காலனே...
நீ உன் தூதர்களான
இடி மின்னலுடன்
என்னை கைது செய்து கொண்டு போயேன்...!

- த.தினேஷ், கடலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT