வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் வ.க.கன்னியப்பன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
வாழ்க்கையதன் நிலையாமை வந்துவந்து துன்புறுத்த
வசந்தம் ஏகும்!
காழ்ப்புணர்ச்சி நீக்கிடலும் கருத்துடனே உழைப்பதுவும்
காவல் தெய்வம்!
சூழ்ந்துவரும் இன்னலினைச் சுடர்மிகுந்த அறிவதனால்
சுழன்றே ஓட்டு!
வாழ்க்கையெனும் போர்க்களத்தை வாழ்ந்துநாமும் பார்த்திடலாம்
வளந்தான் வாழ்வில்!