முகப்பு
கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

Updated On : 27 மே, 2018 at 4:40 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:39 PM

என்றும் என் இதயத்தில் அன்பை பொழிகிறது
அன்னையின் அன்பு மொழி!

என்றும் என் இதயத்தில் இடம்பிடிக்கிறது
தந்தையின் நட்பு மொழி!

என்றும் என் இதயத்தில் இதமளிக்கிறது
என்னவளின் சைகை மொழி!

Advertisement

என்றும் என் இதயத்தில் முள்ளாய் குத்துகிறது
துரோகத்தின் மவுன வலி!

என்றும் என் இதயத்தில் புதைந்து கிடக்கிறது
அடங்கிப்போன ஆசைகளின் மவுனமொழி!

என்றும் என் இதயத்தில் ரணமாய் ஆறாதிருக்கிறது
நாவினால் பிறிதொருவன் சுட்ட வலி!

என்றும் என் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறது
குழந்தைகளின் குறும்பு மொழி!

என்றும் என் இதயத்தில் ஒளிந்திருக்கிறது
தேசத்தின் பக்தி வழி!

என்றும் என் இதயத்தில் வழிந்தோடுகிறது
இரக்கமென்னும் ஈர ஆறு!

என்றும் என் இதயத்தில் நினைவாக பூத்திருக்கிறது
பால்யத்தின் பருவ மொழி!

என்றும் என் இதயத்தில் லயித்திருக்கிறது
என் தாய் தமிழ் மொழி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.