நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

எம்பெருமான் ஒப்பற்ற பிரம்மச்சாரியாக

செ.குளோரியான்

பொருமா நீள்படை ஆழி,சங்கத்தொடு
திருமா நீள்கழல் ஏழுஉலகும் தொழ
ஒருமாணிக்குறள்ஆகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்உள்ளதுஆகுமே.

எம்பெருமான் ஒப்பற்ற பிரம்மச்சாரியாக, வாமனனாக அவதாரம் எடுத்தான், தனது போர் செய்யவல்ல, சிறந்த, நீண்ட ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன், புனிதமான, சிறந்த, நீண்ட தன் திருவடிகள் ஏழு உலகும் செல்லும்படி உலகை அளந்தான், அவனை எல்லாரும் தொழுது பணிந்தார்கள், அத்தகைய கருமாணிக்கம், என் கண்களில் இருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT