நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 2

எம்பெருமான் மண், நீர், நெருப்பு,

செ.குளோரியான்

கண்உள்ளே நிற்கும் காதன்மையால், தொழில்
எண்ணிலும் வரும், என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல்வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம்பிரானையே?

எம்பெருமான் மண், நீர், நெருப்பு, நல்ல வாயு, விண் என அனைத்துமாக விரிந்திருக்கிறான், பக்தியோடு வணங்கினால், நம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறான், அவனை எண்ணினாலே போதும், நம்முன்னே வருகிறான், இதுவே அவனது அருள்தன்மை, இனி, நாம் அவனிடம் கேட்டுப்பெற என்ன இருக்கிறது? (எல்லாம் அவனே அருள்வான்!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT