எம்பிரானை, எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக் கண்ணனை,
கொம்பு,அராவு நுண் நேர்இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய், மடநெஞ்சமே.
மடநெஞ்சமே, எம்பிரானை, என் தந்தை, அவருடைய தந்தை, பாட்டனுக்கெல்லாம் தலைவனானவனை, குளிர்ந்த தாமரை போன்ற கண்களைக் கொண்டவனை, பூங்கொம்புபோலவும் பாம்பைப்போலவும் நுட்பமான மெல்லிடையைக் கொண்ட திருமகளை மார்பில் கொண்டவனை, எம்பெருமானைத் தொழுவாயாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.