நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1

ஒப்பற்ற எம்மான், கண்ணபிரான், என் அமுதம்

செ.குளோரியான்

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்உள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான், என் அமுதம்,
சுவையன், திருவின் மணாளன் என்னுடைச் சூழல்உளானே.

அருகிலுள்ளவை, தொலைவிலுள்ளவை, நடுவிலுள்ளவை ஆகிய அனைத்து அஃறிணைப் பொருள்கள், அருகிலுள்ளோர், தொலைவிலுள்ளோர், நடுவிலுள்ளோர் ஆகிய அனைத்து உயர்திணைப் பொருள்கள்... இவை எல்லாவற்றையும் தனக்குள் சேர்க்கிறவன், அவற்றைப் படைத்துக் காத்து அவற்றின் உயிராகத் திகழ்கிறவன் எம்பெருமான், அத்தகைய ஒப்பற்ற எம்மான், கண்ணபிரான், என் அமுதம், சுவை மிகுந்தவன், திருமகளின் கணவன் என்னருகே உள்ளானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT