நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3

எம்பெருமானிடம் செல்லுங்கள்

செ.குளோரியான்

பாடல் 3

தக்கிலமே கேளீர்கள், தடம் புனல்வாய் இரை தேடும்
கொக்கு இனங்காள், குருகு இனங்காள், குளிர் மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண், கை, கால், செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திருமேனி அடிகளுக்கே.

பெரிய நீர்த்துறைகளிலே இரை தேடுகின்ற கொக்கினங்களே, குருகினங்களே, எனக்காக நீங்கள் எம்பெருமானிடம் செல்லுங்கள், அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? குளிர் நிறைந்த திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருப்பவர் எம்பெருமான், செந்தாமரைபோல் திருக்கண்கள், திருக்கைகள், திருக்கால்கள், செங்கனிபோன்ற திருவாயைக் கொண்ட அவருடைய திருமேனி, தாமரையின் இலையைப்போல் பசுமையானது, இந்தத் திருக்கோலத்தைக் காணும் தகுதி, என்னைப்போன்ற அடியவர்களுக்கு இல்லையாஎன்று கேட்டுவாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT