27. நன்று நாள் தொறும் - பாடல் 8
நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக்
பாடல் 8
நட்டம் ஆடிய நம்பனை நாள் தொறும்
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்ட வார் முலையாள் உமை பங்கனார்
சிட்டனார் திருவேட்களம் தன்னையே
</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வார் = கச்சு. சிட்டனார் = அனைவரிலும் உயர்ந்தவன்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், திருவேட்களம் எனப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை நீங்கள் தினமும் நினைப்பீர்களாக.</p><p align="JUSTIFY"> </p>
Advertisement