முகப்பு
தினம் ஒரு தேவாரம்

27. நன்று நாள் தொறும் - பாடல் 8

நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக்

Updated On : 9 ஜூன், 2016 at 12:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:59 PM

பாடல் 8

நட்டம் ஆடிய நம்பனை நாள் தொறும்
இட்டத்தால் இனிதாக நினைமினோ
வட்ட வார் முலையாள் உமை பங்கனார்
சிட்டனார் திருவேட்களம் தன்னையே

</p><p align="JUSTIFY"><strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வார் = கச்சு. சிட்டனார் = அனைவரிலும் உயர்ந்தவன்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நடனம் ஆடுபவனும், அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவனும், வட்ட வடிவத்தில் அமைந்த கச்சினைத் தனது மார்பினில் அணிந்துள்ள உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், திருவேட்களம் எனப்படும் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை நீங்கள் தினமும் நினைப்பீர்களாக.</p><p align="JUSTIFY"> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.