முகப்பு
தினம் ஒரு தேவாரம்

28. வனபவள வாய் திறந்து - பாடல் 4

இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும்,

Updated On : 18 ஜூன், 2016 at 10:50 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:02 PM

பாடல் 4

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தி ஓர் வெண்மழுவன் என்கின்றாளால்
சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இரும்பார்ந்த = இரும்பினால் செய்யப்பட்ட. கரும்பானல் = கருங்குவளை மலர்கள். பெரும் பாலன் = மனதினை கொள்ளை கொள்ளும் அழகினை உடைய பாலகன் உருவம்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும், வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே என்றும், திருநீற்றை அணிந்தவனே என்றும், தாருகவனத்து பெண்களின் மனதினை கொள்ளை கொண்ட இளமையான தோற்றத்தை உடையவனே என்றும், பின்னப்பட்ட சடையுடனும் தோன்றியவனே என்றும், என் மகள் ஓயாது கூவிக் கொண்டே இருக்கின்றாள். அவள் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை கண்டாள் போலும்.</p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.