முகப்பு
தினம் ஒரு தேவாரம்

28. வனபவள வாய் திறந்து - பாடல் 9

வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும்,

Updated On : 21 ஜூன், 2016 at 4:11 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:04 PM

பாடல் 9

வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே என்கின்றாளால்
ஊனுலாம் வெண்தலை கொண்டு ஊரூர் பலி திரிவான் என்கின்றாளால்
தேனுலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கான் = காடுகள். கையில் ஏந்திய பிரம கபாலம் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும், புலால் நாற்றம் வீசுவதால் ஊனுலாம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும், உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும் புலால் நாற்றம் வீசும் பிரம கபாலத்தை ஏந்தி பலி ஏற்பதற்காக உலகெல்லாம் திரிந்தவனே என்றும், தேன் உண்ணும் வண்டினங்கள் சூழ்ந்த கொன்றைப் பூக்கள் சிறப்புடன் விளங்கும் மார்பினை உடையவனே என்றும், எனது மகள் பிதற்றிக்கொண்டு இருக்கின்றாள். காடுகள் சூழ்ந்து நீர்வளம் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.</p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.