முகப்பு
தினம் ஒரு தேவாரம்

125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 10

இமையோர்கள் தொழும்

Updated On : 8 ஏப்ரல், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:04 PM

பாடல் 10:

    பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய் கடிந்து
    இருத்தல் செய்த பிரான் இமையோர் தொழ
    பூந்தராய் நகர் கோயில் கொண்டு கை
    ஏந்து மான்மறி எம் இறையே
    

விளக்கம்:

பொருத்தமில்=வேத நெறிகளுக்கு பொருத்தமில்லாத; சிறந்த நூல்களாக கருதப்படுவதற்கு பொருத்தம் ஏதும் இல்லாத சமண மற்றும் புத்த இலக்கியங்கள்; சாக்கிய=புத்த

Advertisement

பொழிப்புரை:

வேத நெறிகளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் பொய்யான சொற்களைக் கடிந்து விளக்கும் பெருமான், இமையோர்கள் தொழும் வண்ணம் பூந்தராய் நகரினில் கோயில் கொண்டுள்ளார். அவரே தனது கையினில் மான் கன்றினை ஏந்தியுள்ள சிவபெருமான் ஆவார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.