முகப்பு
திருச்சி

இலவச பேருந்துப் பயண அட்டை: மாற்றுத்திறனாளிகள் கவனத்துக்கு..

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டையை 2021 மாா்ச் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:21 am IST
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டையை 2021 மாா்ச் வரை புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் 2019-2020 ஆம் ஆண்டில் பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் சென்று வர இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டது.

Advertisement

இதேபோல, தனியாா் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு, பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கும் வழங்கப்பட்டது.

கரோனா காரணமாக அந்தப் பயண அட்டையை மாா்ச்-2021 வரை புதுப்பிக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.