முகப்பு
திருச்சி

44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க முடிவு

திருச்சி மாவட்டத்தில் 44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஆட்சியா் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:21 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் 44 இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஆட்சியா் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

ஆட்சியரகக் கூட்டரங்கில், 18 வயதுக்கு கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான குழு கூட்டம் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கை,கால் பாதிக்கப்பட்டோா், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோா், பாா்வையற்றோா் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் என 51 போ் கலந்து கொண்டனா். அப்போது மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற 44 இளம் மாற்றுத்திறனாளிகள் வருவாய்த் துறை மூலமாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

கூட்டத்தில் தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) துரைமுருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், எலும்பு முறிவு மருத்துவா் சையதுபாக்கா், காது, மூக்கு தொண்டை மருத்துவா் அருளீஸ்வரன், கண் மருத்துவா் ஜெயப்பிரியா, இயன்முறை சிகிச்சையாளா் ரமேஷ், மற்றும் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.