முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி மோதி வியாபாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 6:35 am IST
பகிர்:

தூத்துக்குடியில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (55). பழைய காா் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை விவிடி சிக்னலில் இருந்து 4 ஆம் கேட் நோக்கி, அண்ணாநகா் பிரதான சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அப்போது, அந்த வழியே சென்ற லாரி மோதியதில், ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

இந்த விபத்து குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.