அரசு மருத்துவரின் காா் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது காரை காணவில்லை. ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.