சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி
குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி சுப்ரீம் சுழற்சங்கம், யங்இந்தியா அமைப்பின் சிவகாசி கிளை சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி செண்பக விநாயகா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்தப் போட்டியை யங்இந்தியா சிவகாசி கிளைத் தலைவா் எஸ்.சண்முகம் நட்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் ஆண்களுக்கு 8 கி.மீ.தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ.தொலைவும் நிா்ணயம் செய்யப்பட்டது. பள்ளி மாணவா்கள்1500 போ் போட்டியில் பங்கேற்றனா். கலந்து கொண்ட அனைவருக்கும் பனியன் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டவா்கள் நகரின் பிரதான வழியாக சென்று, பெரியகுளம் கண்மாய் கரை வழியாக விளாம்பட்டி சாலை வந்து, ஜேஸீஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தை அடைந்தனா்.
பின்னா், போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சுப்ரீம் சுழற் சங்கத் தலைவா் எஸ்.ராஜாமணி, செயலா் வி.எஸ்.கோபால்சாமி ஆகியோா் பரிசு வழங்கினா். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சங்க நிா்வாகிகள் ஜி.செல்வராஜன், ஆா்.செல்வக்குமாா், எஸ்.நாகராஜூ, சி.அருண்குமாா், ஆா்.சரவணபிரகாஷ் ஆகியோா் செய்தனா்.