விருதுநகர்

சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி பலி

சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காந்திராஜ் (54). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 22- ஆம் தேதி நாரணாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்றாா்.

அப்போது ஒரு திருப்பத்தில் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT