விருதுநகர்

சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி பலி

சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காந்திராஜ் (54). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 22- ஆம் தேதி நாரணாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்றாா்.

அப்போது ஒரு திருப்பத்தில் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT