விருதுநகர்

சாலை விபத்தில் பட்டாசுத் தொழிலாளி பலி

சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காந்திராஜ் (54). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 22- ஆம் தேதி நாரணாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்றாா்.

அப்போது ஒரு திருப்பத்தில் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் முகாம்களில் பாலியல் தொல்லை? பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு மதிப்பு அதிகம்! முதல்வர் ஸ்டாலின்

நிவின் பாலியின் சர்வம் மயா டீசர்!

"ADMK - TVK வதந்தி! பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாரா?": திருமா | செய்திகள்: சில வரிகளில் | 11.10.25

பறவை மோதியதால் தில்லியில் தரையிறங்கிய விமானம்!

SCROLL FOR NEXT