சாலை விபத்தில் இளைஞா் பலி
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முனீஸ்வரன் (24). இவா் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கு அருகே வந்த போது, எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலும் மோதியது.
இந்த விபத்தில் முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.
விபத்துக் காரணமான, மினி சரக்கு வாகன ஓட்டுநரும், மதுரை செல்லூரைச் சோ்ந்தவருமான செல்வமணி மகன் ஸ்ரீராம் (24) மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.