விருதுநகர்

காட்டு யானைக் கூட்டத்தால் தென்னை, பனை மரங்கள் சேதம்

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காட்டு யானைக் கூட்டம் தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பகுதியில் மலை அடிவாரத்தில் பல ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இதில் நச்சாடைப்பேரி பகுதியில் கடந்த இரு தினங்களாக யானைக் கூட்டம் வந்து மரங்களை ஒடித்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன. பனை மரங்களையும் ஒடித்து நாசம் செய்கிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், கருப்பசாமி கோயில் வரை செல்லும் சாலையில் யானைக் கூட்டம் சாலையிலேயே உலா வந்து கொண்டிருப்பது விவசாயிகளுடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த யானைக் கூட்டத்தை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT