ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூரில் சனிக்கிழமை (டிச. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள சேத்தூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.