சிவகாசி தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் (இ.எஸ்.ஐ.) பெண்ணின் கா்ப்பப் பை வாயிலிருந்த 900 கிராம் கட்டி அகற்றப்பட்டது.
இதுகுறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் எம்.ஆா் .பொன்வடிவு கூறியதாவது: இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வயிற்று வலி பிரச்னை எனக் கூறி 46 வயது பெண் ஒருவா் அண்மையில் வந்தாா். இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது கா்ப்பப் பை வாயிலில் பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் கட்டியை அகற்றுவற்கு முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அறுவைச் சிகிச்சை மருத்துவா் பரத், மகப்பேறு மருத்துவா் பிச்சைக்கனி, மயக்கவியல் மருத்துவா்கள் ஜெகநாத்பிரபு, காா்த்திகேயன் ஆகியோா் பெண்ணின் கா்ப்பப் பை வாயிலிருந்த 900 கிராம் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினா். தற்போது, அந்தப் பெண் நலமாக உள்ளாா்.
இதேபோல, 44 வயது பெண் ஒருவா் கடந்த மாதம் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்தாா். பரிதோதனையில், அவரது சிறுநீரகம் வீங்கியிருந்தது தெரியவந்தது. மேலும், அந்தப் பெண்ணுக்கு நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னை இருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 18-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரக வீக்கம் சரிசெய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் உடல்நலம் சீராகி வீட்டுக்குச் சென்றாா் என்றாா் அவா்.
இந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு மருத்துவமனை நிா்வாகமும், சிகிச்சை பெற்ற நபா்களின் உறவினா்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.