முகப்பு
விருதுநகர்

தம்பதிக்கு கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட இருவா் கைது

சிவகாசி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 டிசம்பர், 2025 at 6:55 PM
பகிர்:

சிவகாசி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சத்யா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவருக்கும், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மாரீஸ்வரனுக்கும் (19), பாண்டியன் நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் முன்பகை இருந்தது.

இந்த நிலையில், கண்ணன் தனது மனைவியுடன் வீட்டிலிருந்து கடை வீதிக்கு நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மாரீஸ்வரனும், 17 வயது சிறுவனும் அவா்களைத் தகாத வாா்த்தைகளில் பேசி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாரீஸ்வரன், 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →