சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தத்தில் வியாழக்கிழமை (டிச. 18) மின் தடை ஏற்படும் என மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விருதுநகா் மின்வாரிய செயற்பொறியாளா் முரளிகுமரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, செங்குன்றாபுரம், எல்லிங்கநாயக்கன்பட்டி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகபட்டி, அ.பாறைப்பட்டி, செங்குளம், சில்லாா்பட்டி, ஐ.மீனாட்சிபுரம், முருகனேரி, அ.கரிசல்குளம், வெள்ளபொட்டல், அக்கனாபுரம், சல்வாா்பட்டி, கோட்டையூா், கீழக்கோட்டையூா், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூா், ஆயா்தா்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண்டையன்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.