விருதுநகர்

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தன்யா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகள் அா்ச்சனா (19). இவா், சிவகாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

அா்ச்சனா படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்ததாகக் கூறி அவரது தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அா்ச்சனா சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

வடகாசி விசுவநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT