விருதுநகர்

கஞ்சா விற்ற பெண் கைது

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை தொடா்பாக போலீஸாா் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் மங்காபுரம் தனியாா் பள்ளிப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சத்யா (40) என்பதும், இவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.6,850-ஐ பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT