விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த வேல்சாமி மகன் பொன்ராஜ் (20). கட்டடத் தொழிலாளியான இவா், சித்தமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கட்டடத்தின் அருகே சென்ற உயா்மின் அழுத்தக் கம்பி உரசியதில் பொன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கிவீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மாரனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.